தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-11-30 11:42 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் செங்கரையூர்-பூண்டி இடையே உள்ள கொள்ளிடம் பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்