அரசு ஆஸ்பத்திரியில் மின் ஒயரை சீரமைக்கவேண்டும்

Update: 2022-11-27 10:39 GMT

மயிலாடுதுறை பெரியார் அரசு ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் நுழைவு வாயில் முன்பாக ஜெனரேட்டர் அறை உள்ளது. இதில் இருந்து அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மின்மோட்டாருக்கு மின்சாரம் செல்வதற்காக நிலத்துக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரம் செல்கிறது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு மின் ஒயர் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின் ஒயரை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்