எரியாத சோலார் விளக்கு

Update: 2022-11-23 14:11 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் கூத்தனூர் செல்லும் சாலையில் ஓடை அருகே புதிதாக சோலார் விளக்கு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இந்த விளக்கு பழுதாகி கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விவசாய வயலுக்கு செல்லும் விவசாயிகள், மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்