அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2022-11-23 11:58 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புது வேட்டக்குடி ஊராட்சியில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மின்தடை ஏற்படும்போது இப்பகுதி மக்கள் வெளியே நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்