ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-11-20 10:36 GMT

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மெயின்சாலையில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்