அங்கன்வாடி மையத்தில் உரசும் மின்கம்பிகள்

Update: 2022-11-16 11:41 GMT
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமம் சாந்துவார்பட்டியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் மின்கம்பிகள் கட்டிடத்தின் மேல் பகுதியை உரசியவாறு செல்வதினால், மழை பெய்யும்போது கட்டிடத்தில் மின்சாரம் பாயும் நிலை ஏற்படுகிறது. எனவே விபத்து நடக்கும் முன்பு இதனை சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்