புதிய மின்கம்பம் அமைக்கவேண்டும்

Update: 2022-11-13 12:43 GMT

தஞ்சை ரெட்டியார்பட்டி சாலையில் ரெங்கசாமி நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை உள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்