மின்கம்பிகளை ஆக்கிரமித்த செடி, கொடிகள்

Update: 2022-11-13 11:03 GMT

நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சியில் உள்ள 9-வது வார்டு தெற்கு தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் செடி, கொடிகள் வளர்ந்து அதனை ஆக்கிரமித்துள்ளன. இந்த செடி கொடிகளால் மின்கம்பங்கள் இருப்பதே தெரியாமல் உள்ளது. மின்கம்பிகளில் செடி கொடிகள் படர்ந்துள்ளதால், காற்று வீசும் நேரத்தில் மின்தடை ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பிகளை ஆக்கிரமித்த செடி, கொடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்