ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள்

Update: 2022-11-13 10:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பாடகச்சேரி பகுதியில் உள்ள மின்கம்பங்கள் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை கடந்து செல்ல அந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்