விருதுநகர் கருப்பசாமி நகரில் உள்ள சில மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் விபரீதங்கள் எதுவும் நிகழ்வதற்குள் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.