விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் சாலையில் நடமாட பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வாகனஓட்டிகளை இவை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.