பொதுமக்கள் அச்சம்

Update: 2022-11-09 13:29 GMT

பந்தலூர் அருகே படச்சேரி பாலம் அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்