இருளில் மூழ்கும் சாலை

Update: 2022-11-06 15:51 GMT

தர்மபுரி-பாலக்கோடு சாலையில் பாப்பாரப்பட்டி சாலை பிரியும் இடத்தில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இங்கு மேம்பால பணியும் நடக்கிறது. 4 சாலைகள் இணையும் இந்த பகுதி இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே இங்கு உயர் கோபுர மின்விளக்கு அமைத்து இரவு நேரங்களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் போதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்