தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-11-06 13:55 GMT
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு ரோடு கீழ் பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பயணிகளின் நலன்கருதி பாலத்தினுள் 2 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக 2 மின் விளக்குகளும் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் மேடு, பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து 2 மின்விளக்குகளும் சரிசெய்யப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்