தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-11-06 13:26 GMT
திருச்சி கே.கே.நகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள சிதிலமடைந்த மின்கம்பத்தின் அருகே புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு சுமார் 1 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை சிதிலமடைந்த மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்புகளை புதிய மின்கம்பத்திற்கு மாற்றாமல் உள்ளனர். இதனால் புதிய மின்கம்பம் நட்டும் பயன் இல்லாமல் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக மின் இணைப்பு கொடுத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்