தெரு விளக்கு வேண்டும்

Update: 2022-11-06 13:25 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கிழக்கு ஒன்றியம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி மாத்தூர் ஊராட்சி பகுதி அரசு சிறப்பு உயர்நிலைப்பள்ளி பின்புறம் பாலாஜி நகர் உள்ளது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் மின் விளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் இப்பகுதியில் சுற்றித்திரிவதினால் பெண்கள் சுதந்திரமாக தெருவில் நடமாட முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்