மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-06 12:08 GMT

தேரழுந்தூர்-கோமல் சாலை இடையே கிரசன்ட் நகர் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளதால் அந்த வழியாக செல்வோர் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்