மின்கம்பத்தை அகற்றாமல் நடக்கும் சாலை பணி

Update: 2022-10-30 18:14 GMT
செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி-மழவந்தாங்கள் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தேவதானம்பேட்டை பகுதி சாலையில் அமைந்துள்ள மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சாலையில் உள்ள மின்கம்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைத்து விட்டு சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்