தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2022-10-30 18:11 GMT
சங்கராபுரம் தாலுகா பாவளம் கிராமத்திலிருந்து இடுகாட்டிற்கு செல்லும் பாதையில் தெரு மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே பாவளம் கிராமத்தில் இருந்து இடுகாட்டிற்கு செல்லும் பாதையில் தெருமின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்