திசைமாறும் தெருவிளக்கு

Update: 2022-10-30 17:52 GMT

நம்பியூரை அடுத்த அஞ்சானுர் ஊராட்சிக்கு உள்பட்ட வேமண்டம்பாளையத்தில் இருந்து பட்டிமணியாகாரன் பாளையம் செல்லும் ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கை யாரோ சிலர் அடிக்கடி வெளிச்சம் தெரியாத வகையில் திசை திருப்பி விடுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்கை முறையான திசையில் மாற்றுவதோடு யார் அதை திசை திருப்புகிறார்கள்? என்று கண்காணித்து போலீசில் புகார் அளிக்கவேண்டும்.

மேலும் செய்திகள்