எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-10-30 14:23 GMT

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட பூரணாங்குப்பம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட வீதிகளில் தெரு மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதுதொடர்பாக மின்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தெருவிளக்குகள் ஒளிர மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்