எரியாத மின் விளக்குகள்

Update: 2022-10-30 12:10 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், செங்கரையூர் தஞ்சை மாவட்டம் பூண்டி இடையே கொள்ளிடம் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் போக்குவரத்து அதிகமாக உள்ள நிலையில், இரவு நேரங்களில் பாதிக்கு மேற்பட்ட மின் கம்பங்களில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்