ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-23 12:35 GMT
திருச்சி கே.கேநகர் சாலை ரங்கநாதன் 2-து தெருவில் சாலையோரம் மின் கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அந்த மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு இரவு நேரத்தில் எரிவது இல்லை. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்