உயர் மின்கோபுரம் சரிசெய்யப்படுமா?

Update: 2022-10-23 12:22 GMT

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் உள்ள உயர்மின் கோபுரம் சில நாட்களாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பஜார் பகுதியில் அவ்வப்போது திருட்டு சம்பவங்களும், குற்றச்சம்பவங்களும் நடந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுரத்தை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

மேலும் செய்திகள்