உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2022-10-23 11:53 GMT

திருச்சி கே.கே.நகர் சண்முகம் தெரு கருப்பையா கேஸ் குடோன் எதிரில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து மோசமாகன நிலையில், காற்று அடித்தால் விழுந்து விடும் நிலையில் உள்ளது. இப்பகுதி வழியாக தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்