ஆற்றின் கரையில் எச்சாிக்கை பலகை வேண்டும்

Update: 2022-10-23 09:45 GMT

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம், உஞ்சியவிடுதி வெள்ளதேவன் விடுதி சாலை அருகே கல்லனை கால்வாய் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் ஏராளமானோர் குளித்து, துணிகளை துவைத்தும் வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆற்றில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளிக்க இறங்குவதால், சுழலில் சிக்கி ஏராளமானோா் இறந்து விடுகின்றனர். இதனால் ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்க தனியாக இடம் ஏற்படுத்தி தருவதோடு, எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்