விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பம்

Update: 2022-10-19 15:25 GMT

விருதுநகர் மாவட்டம் அச்சம்தவிர்த்தான் அக்ரகாரம் தெருவில் புதிய சாலை போடப்பட்டது. சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் கவனக்குறைவினால் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்