தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-10-19 12:46 GMT

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் மெயின் ரோடு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இந்த நிலையில் தினசரி செல்லும் சரக்கு வாகனங்களில் பலமுறை மின்கம்பிகள் உரசி அறுந்து விழுகிறது. பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்