மின்கம்பியில் உரசும் மரக்கிளைகள்

Update: 2022-10-19 12:22 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமம், இபி அலுவலகம் அருகில் ஒரு அரசமரம் இருக்கிறது. இந்த நிலையில் அரசமரத்தின் அருகில் இப்பகுதி மக்களுக்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த அரசமரத்தின் அருகே உள்ள மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு இருப்பதால் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்