மின் கம்பத்தால் விபத்து அபாயம்

Update: 2022-10-12 16:18 GMT
பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியான கலைமகள் தெருவில் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று நீண்ட காலமாக உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தை அகற்றி தர இப்பகுதி மக்கள் பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடமும், குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பாக சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்