ஆபத்தான நிலையில் மின்கம்பி

Update: 2022-10-09 15:41 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கணபதி அக்ரஹாரம் மணலூரில் இருந்து தேவன்குடி செல்லும் சாலையில் மின்கம்பி ஒன்று அறுந்து விழும் நிலையில் உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், தற்போது தஞ்சை பகுதியில் மழை பெய்து வருவதால் மின்கம்பி அறுந்து விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பியை அகற்றிவிட்டு புதிய மின்கம்பி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்