துருபிடித்த மின்கம்பம்

Update: 2022-10-05 15:28 GMT

திருவாரூர் காந்தி சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் உள்ள இரும்பிலான மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பராமிப்பின்றி காணப்படுகிறது. மின்கம்பத்தின் அடியில் துருபிடித்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமாயின் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் அந்தவழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்