புதிய மின்கம்பம் வேண்டும்

Update: 2022-10-05 13:20 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு சந்தை பகுதியில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்