மின்விளக்கு எரியவேண்டும்

Update: 2022-10-03 10:36 GMT

நீடாமங்கலம் வடக்குவீதி அருகில் நியூரோடு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கு சரிவர ஒளிரவில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சமூகவிரோதிகள் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக இந்த வழியாக செல்லவே பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்