உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-10-03 10:33 GMT

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலத்தில் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் மூலம் திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் பஸ் நிறுத்தம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்கு அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்