ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2022-10-02 15:06 GMT

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த மணலூர் ஊராட்சி தெற்கு ஆதிதிராவிடர் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மின்கம்பம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் அபாயநிலையில் உள்ளது. இதனால் அந்தவழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட் அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்