ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம்

Update: 2022-09-30 13:06 GMT

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த மணலூர் ஊராட்சியில் தெற்கு ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மெயின் ரோடு அருகே உள்ள மின்கம்பம் உரிய பாராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்று வீசினால் கூட சாய்ந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் அந்தவழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தினை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்