சாலையின் நடுவே ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-29 13:34 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட காஞ்சில் பழனி தெரு 5-வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன்பு அந்த மின்கம்பத்தை மற்றொரு இடத்தில் மாற்றி நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்