எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-09-27 12:43 GMT
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளில், ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் போதிய வெளிச்சம் இன்றி, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே உயர்கோபுரத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் ஒளிர செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்