தாழ்வாக செல்லும் மின்கம்பியால் அபாயம்

Update: 2022-09-27 10:48 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே கடுவனூர் மற்றும் புதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் மேற்பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. தொட்டுவிடும் தூரத்தில் உள்ள அந்த மின்கம்பிகள், சில இடங்களில் கரும்பு பயிர்களை உரசியபடி உள்ளன. இதனால் அங்கு மின் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் விளை நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச செல்லவே விவசாயிகள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்