தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-25 11:56 GMT

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நானபரப்பு அருகே உடைந்த நிலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சிதிலமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்து வெளியிடப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் நட்டனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்