மின் ஒயர்களை மாற்ற கோரிக்கை

Update: 2022-09-23 14:16 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், கண்ணுடையான்பட்டி கிராமம், காட்டுப்பட்டி காமராஜர் நகர் முதல் குறுக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் செல்லும் மின்சாரம் ஒயர் சிங்கில் பீஸ் ஆக செல்வதால் வீட்டில் இருக்கும் மிக்சி, கிரைண்டர், மின் மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. மேலும் மழைக்காலங்களிலும் அடிக்கடி மின் ஒயர் அறுந்து விடுகிறது, எனவே மின் ஒயரை மாற்றி மின் கம்பியாகவும், சிங்கிள் பீசை இரண்டு பீசாகவும் மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்டிகை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்