ஆபத்தான நிலையில் மின்கம்பம்

Update: 2022-09-22 11:49 GMT

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை பகுதியில் உள்ள கடைவீதியில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மின்கம்பம் வலுவிழந்து இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்