எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2022-09-16 12:11 GMT

கரூர் மாவட்டம், நடையனூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கு பின்புறம் மின் கம்பம் நடப்பட்டு அந்த மின் கம்பத்தில் இருந்து அருகாமையில் உள்ள வீடுகளுக்கும், விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டார்களுக்கும் மின் வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அதன் அருகில் புதிய மின் கம்பம் நடப்பட்டு நீண்ட மாதம் ஆகியும் இதுவரை பழைய மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகளை புதிய மின் கம்பத்தில் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மின் கம்பம் முறிந்து சாலையில் விழும் நிலை ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்