புதிய மின்கம்பம் அமைக்கவேண்டும்

Update: 2022-09-15 12:33 GMT

திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சியில் தென்புலியூர் கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. குறிப்பாக அதன் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், தென்புலியூர்.

மேலும் செய்திகள்