மின்தடை அறிவிப்பால் குழப்பம்

Update: 2022-09-14 14:05 GMT
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் மின்தடை அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அப்பகுதிகளில் மின்தடை என்று அறிவிக்கின்றனர். ஆனால் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இதற்கிடையே அவ்வப்போது முன்னறிவிப்பு இன்றி மின்தடை செய்கின்றனர். இதனால் விவசாய நிலங்களுக்கு சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. எனவே மின்தடை குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்