நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா என்.புதுப்பட்டி கிராமத்தில் லத்துவாடி ரோடு குபேரன்நகரில் தெருவிளக்கு இல்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் இரவில் பாம்பு நடமாட்டமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்களின் நலன் கருதி தெரு விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.