தெரு மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-09-11 13:42 GMT
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட சித்தபட்டினம் கிராமம் கோழிப்பண்ணை சாலையில் தெரு மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் தெரு மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்