சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்கள்

Update: 2022-09-09 15:24 GMT

அரியலூர் கீரைக்கார தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அந்த கம்பங்களை அகற்றி தருமாறு நகராட்சி, மின்சாரத்துறை அலுவலகங்களில் அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பலமுறை புகார் அளித்துள்ளனர். அங்கு வசிக்கும் வீடுகளில் நடைபெறும் சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கும், கட்டுமான பணிகளுக்கும் ஒரு சிறிய லாரி கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. சிமெண்டு மின்கம்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பே நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரும்பு கம்பம் நடும்போது சாலையின் ஓரத்தில் நட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை பொருட்படுத்தாமல் 2-வது கம்பத்தையும் சாலையின் நடுவில் நட்டு பணிகளை முடித்துள்ளனர். இந்த இரு கம்பங்களையும் அகற்றிதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்