மின்மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2022-09-09 13:35 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் சுமார் 3,000 மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 1100-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்இணைப்பு பெற்றுள்ளன. இந்த பகுதியில் போதுமான மின்மாற்றிகள் இல்லாததால் மாலை நேரத்தில் போதுமான மின்சாரம் வீடுகளுக்கு கிடைப்பதில்லை. அதாவது மின் பற்றாக்குறையால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்